sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

'குடிநீர் பிரச்னையை கண்டுக்கல' கலெக்டர் ஆபீசை பெண்கள் முற்றுகை

/

'குடிநீர் பிரச்னையை கண்டுக்கல' கலெக்டர் ஆபீசை பெண்கள் முற்றுகை

'குடிநீர் பிரச்னையை கண்டுக்கல' கலெக்டர் ஆபீசை பெண்கள் முற்றுகை

'குடிநீர் பிரச்னையை கண்டுக்கல' கலெக்டர் ஆபீசை பெண்கள் முற்றுகை


ADDED : பிப் 04, 2025 05:44 AM

Google News

ADDED : பிப் 04, 2025 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: சின்னமணவாரனப்பள்ளி பஞ்., பெண்கள், 20க்கும் மேற்-பட்டோர் நேற்று, காலிக்குடங்களுடன் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், 'கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே சின்ன மணவாரனப்பள்ளி பஞ்., ஜிங்-களூர், சலாம் நகரில், 35 குடும்பங்களை சேர்ந்த, 200க்கும் மேற்-பட்டோர் வசிக்கிறோம். அங்கு கடும்

குடிநீர் தட்டுப்பாடு உள்-ளது. இங்கு கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன், மேல்நிலை நீர்தேக்-கத்தொட்டி மூலம்

பைப்லைன் அமைத்து குடிநீர் வழங்கினர். ஆனால் சில வாரங்களிலேயே அங்கு சாக்கடை கால்வாய் கட்ட

பொக்லைன் மூலம் குழி தோண்டினர். அதன்பின் குடிநீர் வர-வில்லை. சாக்கடை கால்வாயும் கட்டவில்லை.

குடிநீர், மற்ற பகு-திகள் அனைத்திற்கும் செல்லும் நிலையில், எங்கள் பகுதிக்கு மட்டும் வரவில்லை. ஜல்ஜீவன்

திட்டத்திலும், பைப் லைன் அமைத்து தரவில்லை. நாங்கள், குடிநீருக்கு ஒரு கி.மீ., துாரம் வரை சென்று

கிணற்றிலோ அல்லது மேல்நிலை நீர்தேக்கத்-தொட்டி அருகிலுள்ள பைப்பிலோ தண்ணீர் பிடித்து வருகிறோம்.

கூலித்தொழிலாளிகளான நாங்கள் வருமானத்தின் பெரும்பகு-தியை கொடுத்து, டிராக்டரில் குடிநீர் வாங்கி

வருகிறோம்' என்-றனர்.இதைதொடர்ந்து, குடிநீர், சாக்கடை கால்வாய் கேட்டு, கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து சென்றனர்.






      Dinamalar
      Follow us