ADDED : நவ 21, 2025 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், சூளகிரி அடுத்த சிங்கிரிப்பள்ளியை சேர்ந்தவர் எல்லப்பா, 40, கூலித்தொழிலாளி. இவர், கடந்த, 16 மாலை ஹோண்டா ஷைன் பைக்கில் சென்றுள்ளார்.
தேன்துர்க்கம் அருகே கெலமங்கலம் சாலையில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பைக், கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் படுகாயம் அடைந்தார். தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இறந்தார். உத்தனப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

