sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மனநலம் குன்றிய பெண்ணின் 22 பவுன் அபகரிப்பு

/

மனநலம் குன்றிய பெண்ணின் 22 பவுன் அபகரிப்பு

மனநலம் குன்றிய பெண்ணின் 22 பவுன் அபகரிப்பு

மனநலம் குன்றிய பெண்ணின் 22 பவுன் அபகரிப்பு


ADDED : ஜூலை 12, 2011 12:15 AM

Google News

ADDED : ஜூலை 12, 2011 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரையில் மனநலம் குன்றிய தங்கையிடம் 22 பவுனை அபகரித்து, அவரை வீட்டை விட்டு வெளியேற்றியதாக, அண்ணன் மீது மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பு-நீதிபதி ஸ்ரீதரனிடம் புகார் அளிக்கப்பட்டது.

மதுரை கான்பாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற பொது இன்சூரன்ஸ் அதிகாரி ஈஸ்வரன். இவர், சென்னையில் வசிக்கிறார். இவருக்கு நான்கு சகோதரிகள், இரண்டு சகோதரர்கள் உள்ளனர். மனநலம் குன்றிய இளைய சகோதரி சுமதி (45). இவரது பாதுகாப்பு மற்றும் மருத்துவ செலவுக்காக 22 பவுன், 28 ஆயிரம் ரூபாய் மற்றும் வீடு ஒதுக்கி மற்றொரு சகோதரர் சுப்பிரமணியனிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.



சுப்பிரமணியன், அவரது மனைவி கமலா ஆகியோர் சுமதியை பராமரிக்காமல், 22 பவுன், 28 ஆயிரம் ரூபாயை எடுத்து கொண்டதோடு, அவருக்கு ஒதுக்கிய வீட்டையும் ஒத்திக்கு விட்டது ஈஸ்வரனுக்கு தெரியவந்தது. தங்கையை தேடி ஈஸ்வரன் மதுரைக்கு வந்தார். அங்கு தங்கை இல்லை. சுப்பிரமணியன், கமலா ஆகியோர் சுமதியை வீட்டை விட்டு வெளியேற்றியது தெரியவந்தது. தங்கையை கண்டுபிடித்து கொடுத்து, அவரது நகை, பணம், வீட்டை மீட்டு கொடுக்கும்படி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பு-நீதிபதி ஸ்ரீதரனிடம் நேற்று ஈஸ்வரன் புகார் கொடுத்தார். சார்பு-நீதிபதி உத்தரவுப்படி விசாரணை நடக்கிறது.










      Dinamalar
      Follow us