sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரையில் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம்

/

மதுரையில் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம்

மதுரையில் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம்

மதுரையில் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம்


ADDED : பிப் 25, 2025 05:35 AM

Google News

ADDED : பிப் 25, 2025 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில் பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க., சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

திருப்பரங்குன்றம்


மதுரை கிழக்கு மாவட்டம் சார்பில் நடந்த விழாவிற்கு இளைஞரணி செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார்.

ஒன்றிய செயலாளர் முருகன், இலக்கிய அணி செயலாளர் மோகன்தாஸ், நிர்வாகிகள் செல்வகுமார், பாலா, பாண்டுரங்கன், வேல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களுக்கு எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில துணைச் செயலாளர் பாரி மதிய உணவும், திருநகர் செஷையர் முதியோர் இல்லத்தில் காலை உணவும் வழங்கினார். நிர்வாகிகள் கார்த்தி, சரத்குமார், ஆறுமுகம் கலந்து கொண்டனர்.

மேலுார்


அ.வலையபட்டி ஊராட்சியில் எம்.எல்.ஏ., பெரியபுள்ளான் தலைமையில் விழா நடந்தது. அழகர்கோவில் சுந்தரராஜா பள்ளி மாணவிகளுக்கு இனிப்பும், எழுதுபொருட்களும் வழங்கப்பட்டது. மேலுாரில் ஜெ., பேரவை செயலாளர் தமிழரசன் தலைமையில் வடக்கு ஒன்றிய செயலாளர் பொன். ராஜேந்திரன், கவுன்சிலர் திவாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சி.எஸ்.ஐ., மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கினர்.

வாடிப்பட்டி


பரவையில் ஜெ., படத்திற்கு பேரூர் செயலாளர் ராஜா மாலை அணிவித்தார். ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

பேரூராட்சி துணைத் தலைவர் ஆதவன், வார்டு கவுன்சிலர்கள் சவுந்தரபாண்டி, கீதா, அவைத்தலைவர் நாகமலை, சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சமயநல்லுாரில் முன்னாள் ஊராட்சி தலைவர் மலையாளம் தலைமையில் விழா நடந்தது.

உசிலம்பட்டி-


நகர் செயலாளர் பூமாராஜா தலைமையில் ஜெ. பேரவை செயலாளர் லட்சுமணன், மாநில துணைச் செயலாளர் துரைதனராஜன், நகராட்சித் தலைவர் சகுந்தலா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஓ.பி.எஸ்., அணி சார்பாக எம்.எல்.ஏ., அய்யப்பன் தலைமையில் விழா நடந்தது. அ.ம.மு.க., சார்பில் செயலாளர் மார்க்கெட் பிச்சை, ஒன்றியச் செயலாளர்கள், கட்சியினர் பங்கேற்றனர்.

திருமங்கலம்


ஓ.பி.எஸ்., ஆதரவு எம்.எல்.ஏ. அய்யப்பன் தலைமையில் திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் அன்னதானம் நடந்தது.






      Dinamalar
      Follow us