ADDED : ஏப் 11, 2024 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : உசிலம்பட்டி விக்கிரமங்கலம் ரோட்டில் சந்திரகுமார் தலைமையிலான தேர்தல் பறக்கும்படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த வழியாக டூவீலரில் வந்த விக்கிரமங்கலம் கிழக்கு தெரு முன்னாள் ராணுவவீரர் ரமேஷ் 46, என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ 2 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
இதே போல் உசிலம்பட்டி - மதுரை ரோட்டில் கண்ணன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், டூ வீலரில் கட்டத்தேவன்பட்டி அன்புராஜா 24, என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த ரூ. ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 300ஐ பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணத்தை உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்தனர்.

