/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாற்றுத்திறனாளிகளுக்கு பஸ் பாஸ் வழங்கும் முகாம்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு பஸ் பாஸ் வழங்கும் முகாம்
ADDED : ஜூன் 27, 2024 04:42 AM
மதுரை : மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்து வருகிறது.
இரு நாட்களாக பார்வையற்றோருக்கு வழங்கப்பட்டது. பார்வையற்றோருக்கு அனைத்து பஸ்களிலும் 100 கி.மீ.,க்குள் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வருவதற்கு பாஸ் வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சுவாமிநாதன், தொழில் வழிகாட்டு அலுவலர் வெங்கடசுப்ரமணியன், செயல்திறன் உதவியாளர் பரத்குமார், அரசு போக்குவரத்து கழக துணை மேலாளர் ஏ.டி.நடராஜன், உதவியாளர் கிருஷ்ணவேணி பங்கேற்று பாஸ் வழங்கினர். மொத்தமுள்ள 922 பேரில் நேற்று வரை 771 பேர் பஸ் பாஸ் பெற்றனர்.
இதர மாற்றுத்திறனாளிகளுக்கு இன்றும், நாளையும் (ஜூன் 27, 28) முகாம் நடக்கிறது. முகாமில் விண்ணப்பித்த உடனே பரிசீலித்து பாஸ் வழங்கப்படும். இவ்வகை மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி பயிலவும், பயிற்சி மேற்கொள்ளவும், பணியாற்றும் இடங்களுக்கும் மட்டுமே பாஸ் வழங்கப்படுகிறது.