sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தெற்குவாசல் பாலத்திற்கு இணையாக மற்றொரு பாலம் திட்ட அறிக்கை தயாராகிறது

/

தெற்குவாசல் பாலத்திற்கு இணையாக மற்றொரு பாலம் திட்ட அறிக்கை தயாராகிறது

தெற்குவாசல் பாலத்திற்கு இணையாக மற்றொரு பாலம் திட்ட அறிக்கை தயாராகிறது

தெற்குவாசல் பாலத்திற்கு இணையாக மற்றொரு பாலம் திட்ட அறிக்கை தயாராகிறது

1


ADDED : மே 28, 2024 05:45 AM

Google News

ADDED : மே 28, 2024 05:45 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை நகருக்குள் வரும் பிரதான ரோடுகள் அனைத்தையும் விரிவுபடுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தெற்கு வாசல் - அருப்புக்கோட்டை செல்லும் ரோட்டையும் விரிவுபடுத்தும் பணிகள் நடக்கின்றன.

இந்த ரோட்டில் அவனியாபுரம் முதல் விமான நிலையம் வரை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்தாகிவிட்டது. விமான நிலையம் முதல் ரிங்ரோடு மண்டேலா நகர் வரை விரிவுபடுத்த மரம், மின்கம்பங்களை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

வில்லாபுரம் முதல் அவனியாபுரம் பைபாஸ் வரை ஆக்கிரமிப்புகளை அகற்றினர். விரைவில் ரோடு விரிவாக்கப்பணிகள் நடக்க உள்ளன.

தெற்குவாசல் பகுதியில்ரயில்வே மேம்பாலம் மிகக்குறுகலாக உள்ளது. இதுவும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த பாலம் 7.5 மீ., அகலம் உள்ளது. அருகிலேயே இடதுபுறமாக ஒரு பாலம் அமைப்பதா, பாலத்தை விரிவுபடுத்துவதா என்ற ஆலோசனையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

கூடுதலாக அமையும் பாலம் 12 மீ., அளவில் இருக்கும். அதற்கு அருகில்இடங்களை கையகப்படுத்தியாக வேண்டும்.

விமான நிலையம், அருப்புக்கோட்டை, துாத்துக்குடி என முக்கிய பகுதிகளுக்கு செல்லும் பாதை என்பதால் போக்குவரத்து அதிகமாக உள்ளது. அதற்கேற்ப விரைவாக விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது.

நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் மோகன காந்தியிடம் கேட்டபோது, ''இந்த பாலத்தோடு இணைந்தவாறு மற்றொரு பாலம் கட்டுவதற்கு திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடக்கிறது. அதன்பின் அரசிடம் சமர்ப்பித்து நிர்வாக அனுமதி பெற்று பணிகள் துவங்கும்'' என்றார்.






      Dinamalar
      Follow us