/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எம்.ஜி.ஆர்., போல் நடிகர் விஜய் மக்களுக்கு கொடுக்க நினைக்கிறார் அ.தி.மு.க., கூட்டணியில் சேர செல்லுார் ராஜூ 'ஐஸ்'
/
எம்.ஜி.ஆர்., போல் நடிகர் விஜய் மக்களுக்கு கொடுக்க நினைக்கிறார் அ.தி.மு.க., கூட்டணியில் சேர செல்லுார் ராஜூ 'ஐஸ்'
எம்.ஜி.ஆர்., போல் நடிகர் விஜய் மக்களுக்கு கொடுக்க நினைக்கிறார் அ.தி.மு.க., கூட்டணியில் சேர செல்லுார் ராஜூ 'ஐஸ்'
எம்.ஜி.ஆர்., போல் நடிகர் விஜய் மக்களுக்கு கொடுக்க நினைக்கிறார் அ.தி.மு.க., கூட்டணியில் சேர செல்லுார் ராஜூ 'ஐஸ்'
ADDED : ஜூன் 19, 2024 04:44 AM
மதுரை : ''நடிகர் விஜய் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., போல சம்பாதித்த பணத்தை மக்களுக்கு கொடுக்க நினைக்கிறார். அவர் அ.தி.மு.க., கூட்டணிக்கு வந்தால் நல்லது தான்,'' என, மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ கூறினார்.
அவர் கூறியதாவது: அ.தி.மு.க., தலைவர்களும், தொண்டர்களும் தேர்தலை கண்டு அஞ்சுவதில்லை.
தேர்தலுக்கு தேர்தல் தி.மு.க., புதுப்புது யுக்திகளை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் தி.மு.க.,விற்கு செல்வாக்கு கூடியுள்ளது என்றால் லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிட்டு இருக்க வேண்டும். 2026 சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டால் அ.தி.மு.க.,வும் தனித்துப் போட்டியிடும்.
பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்கக்கூடாது என ஜெயலலிதா எடுத்த கொள்கை முடிவிற்கு மாறாக கூட்டணி வைத்து விட்டோமே என்ற உறுத்தல் உள்ளது.
லோக்சபா தேர்தல் ஓட்டுகளை வைத்து தமிழகத்தில் பா.ஜ., வளர்ந்து விட்டது எனக்கூற முடியாது. எத்தனை தேர்தல் வந்தாலும் எக்காலத்திலும் தமிழகத்தை பா.ஜ., ஆள முடியாது. நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம் என்றார்.