ADDED : ஆக 12, 2024 03:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : 'மாமதுரை' விழாவின் கடைசி நாளான நேற்று கலை அலங்கார அணிவகுப்பு நடந்தது.
வெங்கடேசன் எம்.பி., மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் துவக்கி வைத்தனர். தெப்பக்குளத்தில் துவங்கி ஆவின் சந்திப்பு வழியாக கே.கே.நகர் ஆர்ச் வரை கலைஞர்கள் அணிவகுத்துச் சென்றனர். கரகாட்டம், ஒயிலாட்டம் போன்ற நாட்டுப்புற கலைகளுடன் கல்லுாரி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.
ஏற்பாடுகளை கான்பிடரேஷன் ஆப் இந்தியன் இன்டஸ்ட்ரீஸ், யங் இந்தியன்ஸ் நிர்வாகிகள் செய்தனர்.

