நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்,: சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோயிலில் சன்மார்க்க சங்க கூட்டம் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடந்தது.
இணை செயலாளர் நாகராஜ் முன்னிலை வகித்தார்.
நிர்வாகி சாந்தி அருள் விளக்கு ஏற்றினார். அகவல் படிக்கப்பட்டது, வள்ளலார் போற்றி என்ற தலைப்பில் தனபாலன் பேசினார். ஜோதி வழிபாடு நடந்தது. நிர்வாகிகள் மகேந்திரன், நாகம்மாள் பங்கேற்றனர். மல்லிகா குடும்பத்தார் அன்னதானம் வழங்கினர்.