ADDED : ஏப் 04, 2024 03:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரையில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் ஓட்டளிப்பதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் வாகன ஊர்வலம் நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய ஊர்வலத்தில் திரளான மாற்றுத் திறனாளிகள் டூவீலர்களில் பங்கேற்றனர். ஊர்வலம் மேலுார் ரோடு, மாநகராட்சி அலுவலகம், தல்லாகுளம் வழியாக தமுக்கத்தை அடைந்தது. கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுவாமிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

