ADDED : செப் 06, 2024 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை; மதுரையில் முதுகு தண்டுவட பாதிப்புள்ள 27 பேர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்காகவும், ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தியும் மூன்று சக்கர மோட்டார் வாகனங்களில் ஊர்வலமாக சென்றனர்.
மதுரை வடக்கு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் துவங்கிய இந்த ஊர்வலத்தை போக்குவரத்துத் துறை இணை கமிஷனர் சத்யநாராயணன் துவக்கி வைத்தார்.
வாகன ஆய்வாளர் உலகநாதன், ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் விஜயராமமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.