ADDED : ஆக 08, 2026 06:31 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு உணவியல் மற்றும் ஊட்டச்சத்து துறை, மதுரை ரியோ மருத்துவமனை தாய்ப்பால் வங்கி சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு, ஊர்வலம் நடந்தது.
ஊர்வலத்தை முதல்வர் ராமசுப்பையா துவக்கி வைத்தார். தலைவர் விஜயராகவன், கவுரவத் தலைவர் ராஜகோபால், செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் ஆழ்வார்சாமி, சுயநிதிப் பிரிவு இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். அழகேசன் வரவேற்றார். மாணவி மோஷிகா அறிமுக உரையாற்றினார். டாக்டர்கள் குமாரியா சாப்ரின், அகிலாதேவி பேசினர். கவிதை, கட்டுரை, ஓவிய போட்டி நடந்தது. மாணவி பவித்ரா முதல் பரிசு பெற்றார். மாணவி நந்தினி நன்றி கூறினார். துறைத் தலைவர் கோபி மணிவண்ணன், பேராசிரியர் மகாலட்சுமி, அபிநயா, ரேணுகாதேவி ஒருங்கிணைத்தனர்.
