sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

விசைத்தறிக்கு எதிராக வழக்கு பசுமை தீர்ப்பாயத்தை அணுகலாம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

/

விசைத்தறிக்கு எதிராக வழக்கு பசுமை தீர்ப்பாயத்தை அணுகலாம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

விசைத்தறிக்கு எதிராக வழக்கு பசுமை தீர்ப்பாயத்தை அணுகலாம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

விசைத்தறிக்கு எதிராக வழக்கு பசுமை தீர்ப்பாயத்தை அணுகலாம்: உயர்நீதிமன்றம் உத்தரவு


ADDED : மே 21, 2024 07:07 AM

Google News

ADDED : மே 21, 2024 07:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடியில் தடை செய்யப்பட்ட நேரத்தில் சட்ட விரோதமாக செயல்படும் விசைத்தறிகள் மீது நடவடிக்கை கோரிய வழக்கில், பசுமை தீர்ப்பாயத்தை அணுக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

புளியங்குடி முப்பிடாதி தாக்கல் செய்த மனு: புளியங்குடியில் தடை செய்யப்பட்ட நேரத்தில் (மாலை 6:00 முதல் காலை 6:00 மணிவரை) சட்டவிரோதமாக சில விசைத்தறிகள் இயக்கப்படுகின்றன.

சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது நடவடிக்கைகோரி கலெக்டர், புளியங்குடி நகராட்சி கமிஷனர், மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளருக்கு 2018ல் மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி சி.சரவணன்: மனுதாரர் தவறாக இந்நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

இவ்வழக்கை விசாரிக்கும் அதிகார வரம்பு தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு உள்ளது. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என இவ்வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட சில விசைத்தறி உரிமையாளர்கள் தரப்பு தெரிவித்தது.

மனுவை கலெக்டர், நகராட்சி கமிஷனர் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தேவையெனில் மனுதாரர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தை அணுகலாம். மனு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us