sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அறநிலைய கமிஷனர் ஆஜராக உத்தரவு

/

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அறநிலைய கமிஷனர் ஆஜராக உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அறநிலைய கமிஷனர் ஆஜராக உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அறநிலைய கமிஷனர் ஆஜராக உத்தரவு


ADDED : செப் 12, 2024 02:17 AM

Google News

ADDED : செப் 12, 2024 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சென்னை ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு:

கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே வெண்ணெய்மலையில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமாக கத்தப்பாறை, அதுார் பகுதியில் உள்ள நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன்.

2019 அக்.,23ல் நீதிபதிகள் அமர்வு, 'நிலத்தை மீட்டு, தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர கோயில் நிர்வாகம், அறநிலையத்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உத்தரவிட்டது. இதை நிறைவேற்றாததால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் பி.வேல்முருகன், பி.புகழேந்தி அமர்வு:

கோயில் நிலம் 547 ஏக்கர் 3 கிராமங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்நீதிமன்றம் உத்தரவிட்டும் கோயில் சொத்துக்களை பாதுகாக்க அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. 547 ஏக்கரில் 47 ஏக்கர் மீட்கப்பட்டுள்ளது. அரசு தரப்பின் பதிலில் திருப்தி இல்லை.' அறநிலையத் துறை கமிஷனர், இணை கமிஷனர் (சென்னை), வெண்ணெய்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் 2019 முதல் பணிபுரிந்த மற்றும் தற்போது பணிபுரியும் அறநிலையத் துறையின் அனைத்து அதாவது மண்டல இணை கமிஷனர்கள் உள்ளிட்ட அலுவலர்கள், கரூர் மாவட்ட எஸ்.பி., வெங்கமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செப்.23 ல் ஆஜராக வேண்டும். தற்போதைய முன்னேற்றம் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us