ADDED : மார் 13, 2025 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி. நேற்று முன்தினம் மாலை கடைக்கு சென்றவரை கடத்தி அப்பகுதியைச் சேர்ந்த சிலர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
பெற்றோர் புகாரின்படி, சிறுமிக்கு தொந்தரவு தந்த அதே பகுதியைச் சேர்ந்த டூ - வீலர் மெக்கானிக் முத்துக்குமார், 18, பிளஸ் 2 மாணவர்கள் இருவர், பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் மற்றும் 17 வயது சிறுவர்கள் இருவர் என ஆறு பேரை 'போக்சோ' சட்டத்தின்கீழ், அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.