sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வழக்கில் சிக்கியதை மறைத்து காரை ரூ.15.50 லட்சத்திற்கு விற்று மோசடி

/

வழக்கில் சிக்கியதை மறைத்து காரை ரூ.15.50 லட்சத்திற்கு விற்று மோசடி

வழக்கில் சிக்கியதை மறைத்து காரை ரூ.15.50 லட்சத்திற்கு விற்று மோசடி

வழக்கில் சிக்கியதை மறைத்து காரை ரூ.15.50 லட்சத்திற்கு விற்று மோசடி


ADDED : ஜூலை 05, 2024 11:18 PM

Google News

ADDED : ஜூலை 05, 2024 11:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில் பயன்படுத்தப்பட்ட காரை, வழக்கில் சிக்கியதை மறைத்து ரூ.15.50 லட்சத்திற்கு விற்று மோசடி செய்த 3 பேர் மீது புதுார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மதுரை மாவட்டம் மேலுார் மலம்பட்டியைச் சேர்ந்தவர் முத்து. இவர் மாட்டுத்தாவணி அமிர்தா கார்ஸ் நிறுவனத்தில் பயன்படுத்தப்பட்ட காரை வாங்க அணுகினார். எந்த ஒரு வில்லங்கம், வழக்கு, பிரச்னை இல்லை என்று நிறுவன உரிமையாளர் பாலமுருகன், அவரது உறவினர் கோபிகிருஷ்ணன் கூறியதை நம்பி மகேந்திரா எக்ஸ்.யு.வி., மாடல் காரை ரூ.15.50 லட்சத்திற்கு வாங்கி 2 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தார்.

இந்நிலையில் அந்த கார் சிவகங்கை மாவட்டம் திருவேகம்புத்துார் போலீஸ் ஸ்டேஷன் வழக்கு ஒன்றில் தொடர்பு உடையது என போலீசார் பறிமுதல் செய்தனர். முத்து புகாரின் பேரில் பாலமுருகன், கோபிகிருஷ்ணன், காரின் முதல் உரிமையாளர் விஜய் மீது வழக்குப்பதிந்தனர்.






      Dinamalar
      Follow us