ADDED : ஏப் 21, 2024 04:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து குறைவால் இஞ்சி மற்றும் பீன்ஸ் கிலோ 100 ரூபாயை கடந்து விற்பனையாகிறது.
கோயம்பேடு சந்தைக்கு கர்நாடகா, மைசூர், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இஞ்சி வரத்து உள்ளது. கோயம்பேடு சந்தைக்கு தினமும் 200 டன் இஞ்சி தேவையுள்ள நிலையில் தற்போது 30 -- 40 டன் மட்டுமேவந்துள்ளது.
இதையடுத்து ஒரு கிலோ இஞ்சி 130 -- 150 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல் கோயம்பேடு சந்தையில் தினமும் 400 டன் பீன்ஸ் தேவையுள்ளது. நேற்று 40 -- 50 டன் மட்டுமே வந்துள்ளது.
இதையடுத்து, ஒரு கிலோ பீன்ஸ் 140 -- 160 ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோல்,பூண்டும் கிலோ 160 --200 ரூபாய்க்குவிற்பனையானது.

