ADDED : ஜூன் 15, 2024 06:22 AM
அ நிறம் | அளவு
சோழவந்தான் : சோழவந்தான் கின்னிமடம் தெருவில் அருளானந்தர் சுவாமி சித்தர் ஜீவசமாதி உள்ளது.
அவரது குருபூஜையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. சாதுக்கள், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை செண்பகம் பிள்ளை, முத்துப்பிள்ளை பங்காளிகள் மற்றும் நிர்வாக கமிட்டி தலைவர் முருகேசன், செயலாளர் கதிரேசன், பொருளாளர் விஜயகுமார் கார்த்திகேயன் செய்திருந்தனர்.
