sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

150 ஆண்டுகளுக்கு பிறகு இளமநாச்சி அம்மன் கோயில் விழா

/

150 ஆண்டுகளுக்கு பிறகு இளமநாச்சி அம்மன் கோயில் விழா

150 ஆண்டுகளுக்கு பிறகு இளமநாச்சி அம்மன் கோயில் விழா

150 ஆண்டுகளுக்கு பிறகு இளமநாச்சி அம்மன் கோயில் விழா


ADDED : ஆக 13, 2024 06:13 AM

Google News

ADDED : ஆக 13, 2024 06:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார் : தெற்குத்தெருவில் 150 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த அரைக்கரை மலையான் வகையறாவுக்கு பாத்தியப்பட்ட இளமநாச்சி அம்மன் கோயில் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மூன்று நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முதல் நாள் ஆக.9 அழகர்கோவில் ராக்காயி அம்மன் கோயிலில் தீர்த்தம் ஆடினர்.

ஆக.,10 தெற்குத் தெரு கோயில் வீட்டில் இருந்து கிளம்பி கடம்பவனம் பொட்டலில் உள்ள இளமநாச்சி அம்மன் கோயிலுக்கு பக்தர்கள் பூஜை பொருட்கள் அடங்கிய பெட்டி, சுவாமி ஆடுவது, மற்றும் பொங்கல்வைப்பதற்கான பொருட்களை கொண்டு சென்றனர்.

பிறகு பாத குரடு ஏறுதல் (அரிவாள் மீது ஏறி நின்று சாமி ஆடுவது), கரகம், தீப்பந்தம் எடுத்து சாமி ஆடினர். அதனை தொடர்ந்து கிடாய் வெட்டி, தலைக்கட்டு பொங்கல்வைத்து சுவாமிக்கு படையல் இட்டனர்.

ஆக.,11ல் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. கோயில் வீடு முன்பு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கினர். தொடர்ந்து பக்தர்களுக்கு தேங்காய், பழம் பிரித்து கொடுக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us