/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஏப்.28ல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 'கற்க கசடற' கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
/
ஏப்.28ல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 'கற்க கசடற' கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
ஏப்.28ல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 'கற்க கசடற' கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
ஏப்.28ல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 'கற்க கசடற' கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
ADDED : ஏப் 24, 2024 06:20 AM
மதுரை : மதுரையில் வேலம்மாள் கல்வி அறக்கட்டளை, தினமலர் நாளிதழ் இணைந்து பத்தாம் வகுப்பு மாணவர்கள் கனவு நிஜமாக என்ன படிக்க வேண்டும் என்ற 'கற்க கசடற' கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி விரகனுார் காமராஜர் அரங்கில் ஏப்., 28 காலை 9:00 முதல் 1:00 மணி வரை நடக்கிறது.
இதில் வேலம்மாள் கல்விக் குழுமத் தலைவர் எம்.வீ. முத்துராமலிங்கம், வருமான வரி கமிஷனர் வி.நந்தகுமார், ஆர்வம் ஐ.ஏ.எஸ்., அகாடமி நிறுவனர் மு.சிபிகுமரன், ஆடிட்டர் தாமோதரன் பகடாலா, கோ.புதுார் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் எஸ்.ரமேஷ்குமார், வேலைவாய்ப்பு அலுவலர் ஜெ.வாசன்பாபு ஆகியோர் பேசுகின்றனர்.
உயர்கல்வி குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் நேரில் விடைகாண 91500 41414, 91500 41415ல் மாணவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும். இந்நிகழ்ச்சியில் அனைத்து அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம். அனுமதி இலவசம்.

