/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் விஜயகாந்த் படத்துடன் பிடிபட்ட லாரி; வாக்காளர்களுக்கு பொருட்களை கொண்டு சென்றதா
/
மதுரையில் விஜயகாந்த் படத்துடன் பிடிபட்ட லாரி; வாக்காளர்களுக்கு பொருட்களை கொண்டு சென்றதா
மதுரையில் விஜயகாந்த் படத்துடன் பிடிபட்ட லாரி; வாக்காளர்களுக்கு பொருட்களை கொண்டு சென்றதா
மதுரையில் விஜயகாந்த் படத்துடன் பிடிபட்ட லாரி; வாக்காளர்களுக்கு பொருட்களை கொண்டு சென்றதா
ADDED : மார் 28, 2024 11:04 PM

மதுரை : மதுரை வணிகவரித்துறை அலுவலகத்தில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் படத்துடன் பிடிபட்ட லாரி குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.
மதுரை பகுதியில் செல்லும் ஜி.எஸ்.டி., வரி செலுத்தாத சரக்கு வாகனங்களை பிடிக்கும் அதிகாரிகள் அவற்றை கே.கே.நகர் வணிகவரி அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைப்பர்.
தற்போது தேர்தல் நடத்தை அமலில் உள்ளதால் கண்காணிப்பு, பறக்கும்படை குழுக்கள் ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் மற்றும் சரக்குகளுடன் செல்லும் வாகனங்களை சோதனையிட்டு பிடித்து வைக்கின்றனர். பணம் பிடிபட்டால் மாவட்ட கருவூலம் மூலம் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கின்றனர்.
பொருட்களை பிடித்தால் வணிக வரித்துறையினரிடம் ஒப்படைப்பர். நேற்று வணிகவரித்துறை அலுவலக வளாகத்தில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் படங்களுடன் லாரி ஒன்று வணிகவரி அலுவலகத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. பிளாஸ்டிக் பொருட்கள், குளிர்பான பாட்டில்களுடன், தே.மு.தி.க., தலைவர் படமும் இருந்ததால் பிடிபட்டதாக தகவல் வெளியானது.
வணிக வரித்துறை இணை கமிஷனர் உமா, ''ஜி.எஸ்.டி., வரி செலுத்தாமல் சென்றால்தான் எங்கள் கவனத்திற்கு வரும்.
இதுகுறித்து எதுவும் தெரியவில்லை. தேர்தல் பறக்கும்படை பிடித்ததா எனவும் தெரியவில்லை,'' என்றார்.
தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் கேட்டபோது, ''அதுபோன்று கட்சி சார்ந்த வாகனம் பிடிபட்டதாக தகவல் வரவில்லை,'' என்றனர். அங்குள்ள 'சி விஜில்' செயலியில் வரும் தேர்தல் புகார்களை கவனிக்கும் பிரிவினரும் இதுகுறித்து புகார் வரவில்லை என்றனர்.
விதிமீறும் வாகனங்கள் குறித்த விவரங்களை நாளிதழ்கள் தெரிவித்தால் தான் விழிப்புணர்வு ஏற்பட்டு தவறுகள் குறையும். ஆனால் அலுவலக வளாகத்தில் நிற்கும் வாகனம் குறித்து அதிகாரிகளுக்கே தெரியாதது ஆச்சரியமே.

