sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

காலையில் மருத்துவ முகாம்; மதியம் அவசர சிகிச்சை மதுரையில் நடமாடும் கால்நடை மருந்தகங்கள்

/

காலையில் மருத்துவ முகாம்; மதியம் அவசர சிகிச்சை மதுரையில் நடமாடும் கால்நடை மருந்தகங்கள்

காலையில் மருத்துவ முகாம்; மதியம் அவசர சிகிச்சை மதுரையில் நடமாடும் கால்நடை மருந்தகங்கள்

காலையில் மருத்துவ முகாம்; மதியம் அவசர சிகிச்சை மதுரையில் நடமாடும் கால்நடை மருந்தகங்கள்


ADDED : ஆக 31, 2024 05:34 AM

Google News

ADDED : ஆக 31, 2024 05:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மதுரையில் நடமாடும் கால்நடை மருந்தக வாகனத்தை கலெக்டர் சங்கீதா துவக்கி வைத்தார்.

ஆக. 20 ல் நடமாடும் மருந்தக வாகனத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். தமிழகத்திற்கு 200 வாகனங்கள் ஒதுக்கப்பட்டதில் மதுரைக்கு 5 வாகனங்கள் கிடைத்துள்ளன.

தல்லாகுளம், திருமங்கலம், மேலுார், சேடபட்டி, உசிலம்பட்டி பகுதிகளில் இந்த வாகனங்கள் முகாம் அமைத்து செயல்படும் என கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் (பொறுப்பு) நந்தகோபால் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: கால்நடை மருத்துவமனை, மருந்தகங்களில் இருந்து 5 கி.மீ., தொலைவில் இந்த நடமாடும் மருத்துவ வாகனங்கள் செயல்படும். தினமும் 2 கிராமங்கள் வீதம் காலை 8:00 முதல் மதியம் 2:00 மணி வரை கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது, குடற்புழு நீக்கம் உள்ளிட்ட பணிகள் செய்யப்படும். மதியம் 2:00 முதல் மாலை 5:00 மணி வரை அவசர சிகிச்சை வாகனமாக தேவைப்படும் இடங்களுக்கு செல்லும். மதுரையில் ஏற்கனவே மொபைல் ஆம்புலன்ஸ் உள்ளதால் அதே 1962 என்ற அவசர எண்ணைத் தொடர்பு கொண்டால் போதும்.

ஞாயிறு முகாம் கிடையாது. இந்த வாகனத்தில் ஒரு டாக்டர், டிரைவர், உதவியாளர் இருப்பர். மத்திய, மாநில அரசு நிதியில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றார்.






      Dinamalar
      Follow us