ADDED : ஆக 09, 2026 05:00 PM
அ நிறம் | அளவு
மேலுார்: மேலுாரில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் அமைதி நடை பயண பேரணி, ஆர்ப்பாட்டம் தலைவர் நுாறுமுகமது தலைமையில் நடந்தது.
செக்கடி கக்கன் சிலையில் இருந்து பஸ் ஸ்டாண்ட் நோக்கி திரளான காங்கிரசார் நடைப்பயணம் சென்றனர். அங்கு தொகுதி மறு வரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். வழக்கறிஞர் துரைபாண்டி, நகர் தலைவர் மகாதேவன், செயலாளர்கள் ராஜ்கபூர், லிபாஸ்சேக், வட்டார தலைவர் பொன் கார்த்திக் பங்கேற்றனர்.
