sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பட்டாசு வெடித்தால் அபராதம்; மலைப்பட்டி மக்கள் கட்டுப்பாடு

/

பட்டாசு வெடித்தால் அபராதம்; மலைப்பட்டி மக்கள் கட்டுப்பாடு

பட்டாசு வெடித்தால் அபராதம்; மலைப்பட்டி மக்கள் கட்டுப்பாடு

பட்டாசு வெடித்தால் அபராதம்; மலைப்பட்டி மக்கள் கட்டுப்பாடு


ADDED : ஆக 09, 2024 01:09 AM

Google News

ADDED : ஆக 09, 2024 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி : உசிலம்பட்டி பகுதியில் ஊர்வலங்களின் போது பட்டாசு வெடித்துச் செல்வதால் அவ்வப்போது விபத்து ஏற்படுகிறது. வெடித்து சிதறி காயம் ஏற்பட்டுள்ளது. பட்டாசு வெடிப்பவர்கள் உறவினர்களாக இருப்பதால் போலீசில் புகாரும் கொடுப்பதில்லை.

போத்தம்பட்டி ஊராட்சி மலைப்பட்டியில் சில மாதங்களுக்கு முன்பு விசேஷ வீட்டுக்கு பட்டாசு வெடித்துச் சென்ற போது எதிர்பாராத விதமாக ஒச்சம்மாள் 60, என்பவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. ஏற்கனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.

இதனால் கவலையடைந்த கிராமத்தினர் ஆலோசனை நடத்தினர். பட்டாசு வெடித்துச் செல்வதால் பணவிரயமும், உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் சம்பவங்களும் நடக்கிறது. அதனால் கிராமத்திற்குல் விசேஷ நிகழ்வுகளின் போது பட்டாசு வெடிக்கக் கூடாது என முடிவு செய்தனர். இந்த முடிவை ஊருக்குள் நுழையுமிடத்தில், மலைப்பட்டி கிராமத்தில் பட்டாசோ, வாணவெடியோ வெடிக்கக் கூடாது. மீறினால் அபராதம் விதிப்பதுடன் போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் அறிவிப்பு பலகையையும் வைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us