ADDED : ஆக 06, 2024 05:19 AM
அ நிறம் | அளவு
மேலுார்: சருகுவலையபட்டி அரசு மேல்நிலை பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பிற்கான ஆயத்த கூட்டம் நடந்தது. ஆசிரியர் மீனாட்சிசுந்தரம் வரவேற்றார்.
தலைமையாசிரியர் உமாமகேஷ்வரி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வசந்தகுமார், ஆசிரியர் சகாய பிரான்சிஸ் சேவியர், ஊராட்சி தலைவி அருந்தேவி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் ஜோதி, ஆசிரியர் சுலோச்சனா, உதவி தலைமை ஆசிரியர் சகாயஎக்பட்சிஸ் பேசினர்.
இதில் வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுநர் சினேகபிரியா உட்பட பலர் பங்கேற்றனர்.
