sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

'நான் நெகிழ்ந்து பார்த்த இளம் தலைவர் ராகுல்' ராஜுவால் அ.தி.மு.க.,வில் சலசலப்பு

/

'நான் நெகிழ்ந்து பார்த்த இளம் தலைவர் ராகுல்' ராஜுவால் அ.தி.மு.க.,வில் சலசலப்பு

'நான் நெகிழ்ந்து பார்த்த இளம் தலைவர் ராகுல்' ராஜுவால் அ.தி.மு.க.,வில் சலசலப்பு

'நான் நெகிழ்ந்து பார்த்த இளம் தலைவர் ராகுல்' ராஜுவால் அ.தி.மு.க.,வில் சலசலப்பு


ADDED : மே 22, 2024 03:30 AM

Google News

ADDED : மே 22, 2024 03:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு நாளான நேற்று, காங்., - எம்.பி., ராகுலை பாராட்டி, முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு, 'எக்ஸ்' தளத்தில் கருத்து வெளியிட்டது அ.தி.மு.க.,வில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று தன், 'எக்ஸ்' தளத்தில் ராகுல் குறித்த வீடியோக்களை வெளியிட்ட செல்லுார் ராஜு, 'நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்' என, பாராட்டு தெரிவித்தார்.

சம்பந்தமே இல்லாமல், அதுவும் ராஜிவ் நினைவு நாளன்று பாராட்ட வேண்டிய அவசியம் என்னவென அ.தி.மு.க., நிர்வாகிகள் இடையே பட்டிமன்றமே நடந்தது.

செல்லுார் ராஜு மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஒரு தரப்பினர் பொதுச்செயலர் பழனிசாமியை வலியுறுத்திள்ளனர்.

அவர்கள் கூறுகையில், 'அரசியலில் தன் இருப்பிடத்தை காட்டிக்கொள்ள ஏதாவது 'கொளுத்தி' போடுவதே செல்லுார் ராஜுவுக்கு வேலையாக உள்ளது.

ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி செய்திருக்க முடியுமா; இந்த நேரம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருப்பார்.

ஜெயலலிதா இருந்த இடத்தில் இருக்கும் பழனிசாமி, கொஞ்சம் கடுமையாக நடவடிக்கை எடுத்தால் தான் கட்சி வளர்ச்சி அடையும். 2026 சட்டசபை தேர்தலிலும் வெல்ல முடியும்' என்றனர்.

இது தொடர்பாக செல்லுார் ராஜு கூறுகையில், “பழனிசாமி போல் ராகுல் எளிமையாக இருப்பதை சுட்டிக்காட்டி, 'இளம் தலைவர்' என, பாராட்டினேன். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை.

தி.மு.க.,வில் கவுன்சிலர்கள் கூட பந்தாவாக வரும் நிலையில், அக்கட்சி கூட்டணி வைத்துள்ள காங்கிரசின் ராகுல் எளிமையாக இருக்கிறார் என்பதை தெரிவிக்கவே, 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டேன்.

இப்போது மட்டுமல்ல எப்போதுமே நான் பாராட்ட தவறியதில்லை. யாராக இருந்தாலும் பாராட்டுவேன். பிரதமர் மோடி தன் தாயார் இறுதிசடங்கை எளிமையாக நடத்தியதை கூட பாராட்டினேன். மற்றபடி, இப்படி பாராட்டியதற்கும் அ.தி.மு.க.,வுக்கு சம்பந்த மில்லை,” என்றார்.






      Dinamalar
      Follow us