sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தலைமை கண்டிப்பால் ராகுல் குறித்த பதிவை நீக்கினார் செல்லுார் ராஜூ

/

தலைமை கண்டிப்பால் ராகுல் குறித்த பதிவை நீக்கினார் செல்லுார் ராஜூ

தலைமை கண்டிப்பால் ராகுல் குறித்த பதிவை நீக்கினார் செல்லுார் ராஜூ

தலைமை கண்டிப்பால் ராகுல் குறித்த பதிவை நீக்கினார் செல்லுார் ராஜூ


ADDED : மே 23, 2024 05:21 AM

Google News

ADDED : மே 23, 2024 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை, : காங்., எம்.பி., ராகுலை பாராட்டி முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ 'எக்ஸ்' தளத்தில் கருத்து வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து அப்பதிவு நீக்கப்பட்டது.

நேற்றுமுன்தினம்தனது 'எக்ஸ்' தளத்தில் ராகுல் குறித்த வீடியோக்களை வெளியிட்ட செல்லுார் ராஜூ, 'நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்' என பாராட்டு தெரிவித்தார்.இது அ.தி.மு.க.,வில் சர்ச்சையை ஏற்படுத்தியது. செல்லுார் ராஜூவோ 'பழனிசாமி போல் ராகுல் எளிமையாக இருப்பதை சுட்டிக்காட்டி 'இளம் தலைவர்' என பாராட்டினேன். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை' என்றார்.

ராகுலை பாராட்டியதற்கு செல்லுார் ராஜூவுக்கு காங்கிரசார் நன்றி தெரிவித்தனர். இது மேலும் அ.தி.மு.க.,வில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று ராகுல் குறித்த வீடியோக்களை 'எக்ஸ்' தளத்தில் இருந்து செல்லுார் ராஜூ நீக்கினார்.

கட்சி நிர்வாகிகள் கூறுகையில் ''ராகுலை பாராட்டியது செல்லுார் ராஜூவின் தனிப்பட்ட கருத்தாக இருந்தாலும் அவர் கட்சியில் முக்கிய பதவியில் இருப்பவர். அவர் சொன்னது அ.தி.மு.க.,வே சொன்னதாகதான் கருதப்படும். இதன் அடிப்படையில் கட்சி தலைமை கண்டித்ததை தொடர்ந்து நேற்று தனது பதிவை நீக்கினார்'' என்றனர்.

ராஜன்செல்லப்பா சமாளிப்பு


அந்த பதிவு குறித்து மதுரை கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா கூறியது:

செல்லுார் ராஜூ அவரது சொந்த கருத்தை கூறியிருக்கிறாரே தவிர அரசியல் ரீதியான கருத்தாக நான் கருதவில்லை. மனதில் பட்டதை கூறி இருக்கிறார். ஆனால் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. லோக்சபா தேர்தல் நடக்கும் போது இந்த கருத்தை அவர் பேசியது ஏன் என்று தெரியவில்லை. வழக்கமாக செல்லுார் ராஜூ அனைவரையும் வாழ்த்த தயங்குவதில்லை. அந்த வகையில் வாழ்த்தியிருக்கிறாரோ'' என்றார்.






      Dinamalar
      Follow us