ADDED : ஏப் 17, 2024 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி, : உசிலம்பட்டி பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப்பணிக்காக ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் இருந்த 7 ஏக்கர் 85 சென்ட் சந்தை திடல் நிலம் நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஒரு ஏக்கருக்கும் மேலான பகுதிகள் விரிவாக்கம் செய்யப்படுவதால் அப்பகுதி நவதானிய கடைகள் உட்பட 140 கடைகள் அகற்றப்பட உள்ளதை கண்டித்து நேற்று உசிலம்பட்டி வட்டார வர்த்தகர்கள் முன்னேற்ற சங்கம், நவதானிய பலசரக்கு சிறுவியாபாரிகள், தரைகடை, காய்கறி, பூ கமிஷன் கடைகள் உள்ளிட்ட சங்கங்கள் சார்பில் கடையடைப்பு நடந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

