ADDED : ஜூன் 16, 2026 08:10 PM
அ நிறம் | அளவு
மேலுார்: பதினெட்டாங்குடியில் ஆத்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு மதிப்பு கூட்டுதல், உள்கட்டமைப்பை பயன்படுத்துதல் குறித்த மாவட்ட பயிற்சி முகாம் நடந்தது.
துணை வேளாண் இயக்குனர் ராணி, உதவி இயக்குனர் ஆனந்தன், வேளாண் அலுவலர்கள் சித்தார்த், பாஸ்கரன், உதவி அலுவலர் பிரியா வேளாண் துறை மானியங்கள், மண் பரிசோதனை ஆய்வின்படி உரம் பயன்படுத்துவது, விவசாய அடையாள எண்ணின் முக்கியத்துவம், வேளாண் விற்பனை, வணிக துறையில் வேளாண் பொருட்களின் மதிப்பு கூட்டுதல், தொழில் நுட்பங்கள், உயிர் உரம் பயன்பாடு குறித்து பயிற்சி அளித்தனர். உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் மருது, சிவரஞ்சனி செய்திருந்தனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராபின் நன்றி கூறினார்.
