ADDED : மார் 08, 2025 03:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு தினமும் இரு வேளை யாகசாலை பூஜை நடக்கிறது.
கோயில் விசாக கொறடு மண்டபத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு வெள்ளிக் குடங்கள், எட்டு பரிவார தெய்வங்களுக்கு பித்தளை செம்புகளில் புனித நீர் நிரப்பி, விநாயகர், சண்டிகேஸ்வரர், அஸ்தர தேவர், சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை, சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளச் செய்யப்பட்டுள்ளனர்.
தினமும் காலை 10:00 மணி, மாலை 5:30 மணிக்கு சிவாச்சாரியார்களால் யாக பூஜை நடத்தப்படுகிறது. மார்ச் 20 காலையில் யாகசாலை பூஜையை பூர்த்தி செய்து சுவாமிகளுக்கு புனித நீர் அபிஷேகம் செய்யப்படும்.