/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
25 ஏக்கர் வாழை, 5 ஏக்கர் வெற்றிலை கொடிகள் சேதம்
/
25 ஏக்கர் வாழை, 5 ஏக்கர் வெற்றிலை கொடிகள் சேதம்
ADDED : ஆக 26, 2025 04:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் ஆக. 23, 24ல் பெய்த மழையால் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் சேதமடைந்த வாழை, வெற்றிலை தோட்டங்களை கலெக்டரின் நேர்முக உதவியாளர் சாந்தி, தோட்டக்கலை துணை இயக்குநர் பிரபா, உதவி இயக்குநர் திவ்யா ஆய்வு செய்தனர்.
பிரபா கூறியதாவது: துவரிமானில் 30 விவசாயிகளின் 25 ஏக்கர் வாழைத்தோட்டங்கள் மழை, காற்றால் முறிந்தும், வேரொடு பெயர்ந்தும் சேதமாகின. 7 விவசாயிகளின் 5 ஏக்கர் வெற்றிலைக் கொடிக்கால்களும் சேதமடைந்தன. அச்சம்பத்து, விளாச்சேரி பகுதியில் 7 விவசாயிகளின் 2.5 ஏக்கர் வாழைத்தோட்டம் சேதமடைந்தது. இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.