sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

/

விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு


ADDED : நவ 12, 2025 12:48 AM

Google News

ADDED : நவ 12, 2025 12:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவனியாபுரம்: டில்லியில் கார் குண்டு வெடிப்பை தொடர்ந்து மதுரை விமான நிலைய உள், வெளி வளாக பகுதிகளில் கூடுதல் போலீசாரும், அதிரடி படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விமான ஓடுதள பாதை, கண்காணிப்பு கோபுரத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களும், வெளி வளாகத்தில் தமிழக போலீசாரும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள், பயணிகள் தீவிர கண்காணிப்பிற்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். வாகனங்கள் நிறுத்துமிடம், சோதனை சாவடி, பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் தொடர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து மறு உத்தரவு வரும்வரை இச்சோதனை தொடரும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரயில்வே ஸ்டேஷன் மதுரை ரயில்வே ஸ்டேஷனிலும் சோதனை நடந்தது. மதுரை -- குருவாயூர் (16327), பாலக்காடு -- திருச்செந்தூர் (16731), எழும்பூர் - - மதுரை தேஜஸ் (22671) உள்ளிட்ட ரயில்களிலும்சோதனை நடந்தது.






      Dinamalar
      Follow us