sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

/

வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 12, 2025 12:49 AM

Google News

ADDED : நவ 12, 2025 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: தனியார் வங்கிகளை தேசிய மயமாக்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மேலவெளி வீதியில் அனைத்து வங்கி ஊழியர்கள் வேலைநேரம் முடிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளன இணைச் செயலாளர் குமரன் கூறியதாவது: பெடரல் வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் மீதுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும். பாங்க் ஆப் பரோடா நிதியுதவியின் கீழ் செயல்படும் நைனிடால் வங்கி நஷ்டத்தில் இயங்குவதால் அதை மூட நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது. அதை பாங்க் ஆப் பரோடா வங்கியுடன் இணைக்க வேண்டும்.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஊழியர்களுக்கான ஓய்வு வயது 58 ஆக உள்ளது. அனைத்து வங்கிகளில் இருப்பதைப் போல 60 வயது என்று அறிவிக்க வேண்டும். தனியார் வங்கிகளில் ஓய்வுக்கு பின் வழங்கப்படும் கருணைத்தொகையை அதிகரிக்க வேண்டும். தனியார் வங்கிகளில் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றார்.

மதுரை, ராமநாதபுரம் மாவட்ட வங்கி ஊழியர் சங்கத் தலைவர் டேவிட் வினோத்குமார், தனியார் வங்கி ஊழியர்கள் சங்கச் செயலாளர் செல்வம், எல்.ஐ.சி., ஊழியர் சங்க மதுரை மண்டல செயலாளர் ரமேஷ்கண்ணன் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us