/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஓடிய காரில் திடீர் தீ உயிர் தப்பிய 6 மாணவர்கள்
/
ஓடிய காரில் திடீர் தீ உயிர் தப்பிய 6 மாணவர்கள்
ADDED : ஆக 09, 2025 10:02 PM

உசிலம்பட்டி:ஓடிக் கொண்டிருந்த காரில் திடீரென பற்றிய தீயால் கார் முற்றிலும் எரிந்தது. காரில் இருந்த பள்ளி மாணவர்கள் ஆறு பேர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பொட்டுலுப்பட்டியைச் சேர்ந்தவர் காசிபாண்டி, 45. இவர், தன் காரில் செக்கானுாரணி தனியார் மெட்ரிக் பள்ளியில் பயிலும் தன் குழந்தைகள் மற்றும் கட்டகருப்பன்பட்டியைச் சேர்ந்த பள்ளி மாணவர்களை தினமும் அழைத்து சென்று, திரும்ப அழைத்து வருவார்.
பள்ளி முடிந்து மாணவர்களை கட்டகருப்பன்பட்டியில் நேற்று மாலை 5:30 மணிக்கு இறக்கிவிட்டு, ஆறு மாணவர்களுடன் பொட்டுலுப்பட்டிக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். போலிபட்டி அருகில், மதுரை- - போடி அகல ரயில் பாதை தரைவழிப் பாலம் வழியாக சென்றபோது, திடீரென கார் தீப்பற்றி எரியத் துவங்கியது.
சுதாரித்த காசிபாண்டி காரை நிறுத்தி, மாணவர்களை வெளியேற்றினார். கார் முழுதும் பற்றி எரிந்தது. உசிலம்பட்டி தீயணைப்பு அலுவலர் ஜீவா மற்றும் வீரர்கள், தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.