/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பறவைகளின் தாகம் தீர்க்கும் மண் கலயம்
/
பறவைகளின் தாகம் தீர்க்கும் மண் கலயம்
ADDED : மார் 11, 2024 06:07 AM
மதுரை: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு யானைமலை கிரீன் பவுண்டேஷன் 153வது வார நிகழ்வில், மரக்கன்று நடுதல், பறவைகளின் தாகத்திற்கு குடிநீர் மண்கலயம் வைத்தல் காந்திமியூசியத்தில் நடந்தது.
சமூக ஆர்வலர் செல்வி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கே. எஸ். சேகர் வளர்மதி அறக்கட்டளை நிறுவனர் ராணி கலந்து கொண்டார்.
காந்தி மியூசிய கல்லுாரி முதல்வர் தேவதாஸ் காந்தி வாழ்த்தி பேசினார். அங்குள்ள மரங்களில் பறவைகளுக்கு குடிநீர் மண் கலயம் வைக்கப்பட்டது. அவற்றில் உணவாக அரிசி, தானியங்கள் வைக்கப்பட்டன.
சமூக ஆர்வலர் அசோக்குமார், அப்துல் கலாம் வழியில் நண்பர்கள் அமைப்பின் நிறுவனர் செந்தில், நீர்நிலைகள் அமைப்பின் நிறுவனர் அபூபக்கர், மாற்றம் தேடி நல அறக்கட்டளை நிறுவனர் பாலமுருகன், நல்லோர் குழு ஒருங்கிணைப்பாளர் அறிவழகன்,, சிலம்பம் மாஸ்டர் பாண்டி யானைமலை கிரீன் பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளர்கள் தலைமை ஆசிரியர் தென்னவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

