sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

போலீஸ் காவலில் அஜித்குமார் மரணம் கூடுதலாக ரூ.25 லட்சம் இழப்பீடு: உயர்நீதிமன்றம் உத்தரவு

/

போலீஸ் காவலில் அஜித்குமார் மரணம் கூடுதலாக ரூ.25 லட்சம் இழப்பீடு: உயர்நீதிமன்றம் உத்தரவு

போலீஸ் காவலில் அஜித்குமார் மரணம் கூடுதலாக ரூ.25 லட்சம் இழப்பீடு: உயர்நீதிமன்றம் உத்தரவு

போலீஸ் காவலில் அஜித்குமார் மரணம் கூடுதலாக ரூ.25 லட்சம் இழப்பீடு: உயர்நீதிமன்றம் உத்தரவு


ADDED : ஜூலை 23, 2025 06:59 AM

Google News

ADDED : ஜூலை 23, 2025 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் மரணமடைந்ததற்கு தமிழக அரசு வழங்கிய ரூ.7.5 லட்சம் இழப்பீடு போதுமானதல்ல. கூடுதலாக ரூ.25 லட்சம் இழப்பீடு உடனடியாக வ ழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

சிவகாசி வழக்கறிஞர் மாரீஸ்குமார் தாக்கல் செய்த பொதுநல மனுவில், அஜித்குமாரின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்' எனக்குறிப்பிட்டார். இதுபோல் திருப்புவனம் வழக்கறிஞர் கார்த்திக்ராஜா உள்ளிட்டோர் வெவ்வேறு நிவாரணம் கோரி மனுக்கள் தாக்கல் செய்தனர்.

நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு நேற்று விசாரித்தது.

தமிழக அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் (ஏ.ஏ.ஜி.,) அஜ்மல்கான், அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார், பிளீடர் திலக்குமார், சி.பி.ஐ.,தரப்பு வழக்கறிஞர் முகைதீன் பாஷா, மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் மாரீஸ்குமார், அருண்சுவாமிநாதன், அறிவழகன், அழகுமணி, சத்தியசிதம்பரம் ஆஜராகினர்.

அஜ்மல்கான்: அஜித்குமாரின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.7.5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அவரது சகோதரருக்கு ஆவினில் வேலை, தாய்க்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. முக்கிய சாட்சியான சக்தீஸ்வரனுக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. நகை திருட்டு வழக்கையும் சேர்த்து சி.பி.ஐ.,விசாரிக்க அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு நிறைவேற்றப்பட்டுள்ளது.

மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள்: இழப்பீடு 7.5 லட்சம் போதுமானதல்ல. ஜம்மு-காஷ்மீரில் போலீஸ் காவலில் சித்ரவதையை அனுபவித்த நபருக்கு ரூ.50 லட்சம் வழங்க சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அஜித்குமார் குடும்பத்திற்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும். போலீசாரின் துன்புறுத்தலுக்கு ஆளான முக்கிய சாட்சிகளான நவீன், அருண், பிரவீனுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அவர்களுக்கு டெலிபோன் மூலம் அச்சுறுத்தல் வருகிறது.

சாட்சிகள் பாதுகாப்பு திட்டத்தின்படி பாதுகாப்பு வழங்க உத்தரவிடக்கோரி சிவகங்கை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிபதிகள்: போலீஸ் சித்ரவதையால் பாதிக்கப்பட்டு உயிருடன் உள்ள நபருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கும் நிலையில், இவ்வழக்கில் இறந்த நபரின் குடும்பத்திற்கு கூடுதல் இழப்பீடு வழங்கினால் என்ன.

அஜ்மல்கான்: ரூ.7.5 லட்சத்தை மட்டும் இழப்பீடாக கருதக்கூடாது. ஆவினில் வேலை, இலவச வீட்டுமனை பட்டாவையும் சேர்த்து இழப்பீடாக கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அஜித்குமார் மரணம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ., விரைந்து விசாரித்து வருகிறது. அதுபோல் நகை திருட்டு வழக்கையும் விசாரிக்க வேண்டும். இரு வழக்கையும் விசாரித்து ஆக.20 க்குள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

வழக்கின் முக்கிய சாட்சிகளான நவீன், அருண், பிரவீன், சக்தீஸ்வரனுக்கு சாட்சிகள் பாதுகாப்பு திட்டத்தின்படி பாதுகாப்பு வழங்க உத்தரவிடக்கோரி சிவகங்கை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதை மாவட்ட முதன்மை நீதிபதி 7 வேலை நாட்களுக்குள் பரிசீலித்து 4 பேருக்கும் பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

அஜித்குமாரின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.7.5 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்கியது போதுமானதல்ல. அவர் 29 வயதில் கொல்லப்பட்டுள்ளார்.

கூடுதலாக இழப்பீடு ரூ.25 லட்சத்தை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும். போலீசாரின் விசாரணையில் துன்புறுத்தலுக்கு ஆளாகி காயமடைந்தவர்கள் சாட்சிகள் பாதுகாப்பு திட்டத்தின்படி இழப்பீடு கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி நிவாரணம் தேடலாம்.

இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us