ADDED : மார் 29, 2025 05:29 AM
அ நிறம் | அளவு
மேலுார்: மேலுாரில் அ.தி.மு.க., புறநகர் கிழக்கு மாவட்ட ஜெ., பேரவை சார்பில் தி.மு.க., அரசை கண்டித்து திண்ணை பிரச்சாரம் நடந்தது.
செயலாளர் தமிழரசன் தலைமை வைத்து துண்டு பிரசுரங்களை வழங்கினார். மேலுார், கொட்டாம்பட்டி ஒன்றிய செயலாளர்கள் பொன்னுச்சாமி, வெற்றிசெழியன், பொன் ராஜேந்திரன், நிர்வாகிகள் மலைச்சாமி, நாகசுப்பிரமணியன், கவுன்சிலர் திவாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
