sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 திருப்பரங்குன்றத்தில் தீபம் ஐகோர்ட்டில் மேல்முறையீடு

/

 திருப்பரங்குன்றத்தில் தீபம் ஐகோர்ட்டில் மேல்முறையீடு

 திருப்பரங்குன்றத்தில் தீபம் ஐகோர்ட்டில் மேல்முறையீடு

 திருப்பரங்குன்றத்தில் தீபம் ஐகோர்ட்டில் மேல்முறையீடு


ADDED : டிச 03, 2025 09:21 AM

Google News

ADDED : டிச 03, 2025 09:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: 'கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, வழக்கமான இடங்களை தவிர, திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணிலும் தீபம் ஏற்ற வேண்டும்' என, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக கோவில் நிர்வாகம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல் முறையீடு செய்துள்ளது.

மதுரை மாவட்டம், எழுமலையை சேர்ந்த ராம ரவிக்குமார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமான இடங்களை தவிர, தீபத்துாணிலும் கார்த்திகை தீபத்தை கோவில் நிர்வாகம் ஏற்ற வேண்டும்' என, நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து, கோவில் செயல் அலுவலர் நேற்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். பதிவுத்துறையின் பரிசீலனைக்கு பின் மனு ஏற்கப்படும் பட்சத்தில், இரு நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும்.






      Dinamalar
      Follow us