நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் : சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோயிலில் சன்மார்க்க சங்க கூட்டம் நடந்தது.
தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். நிர்வாகி நாகம்மாள் முன்னிலை வகித்தார். அருள் விளக்கை லோகம்மாள் ஏற்றினார். அகவல் பாராயணம் படிக்கப்பட்டது. 'வள்ளலாரின் அற்புதங்கள்' என்ற தலைப்பில் சந்திரசேகர் பேசினார். ஜோதி வழிபாடு நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. இணைச் செயலாளர் நாகையா நன்றி கூறினார்.