sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மாநகராட்சி வரி முறைகேடு 2 பேருக்கு ஜாமின் அனுமதி

/

மாநகராட்சி வரி முறைகேடு 2 பேருக்கு ஜாமின் அனுமதி

மாநகராட்சி வரி முறைகேடு 2 பேருக்கு ஜாமின் அனுமதி

மாநகராட்சி வரி முறைகேடு 2 பேருக்கு ஜாமின் அனுமதி


ADDED : செப் 09, 2025 05:44 AM

Google News

ADDED : செப் 09, 2025 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மாநகராட்சி பகுதியில் சொத்துவரி விதிப்பு முறைகேடு தொடர்பாக 2 ஊழியர்களுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஜாமின் அனுமதித்தது.

இவ்வழக்கில் 17 பேர் கைதாகினர். இவர்களில் புரோக்கர்கள் முகமது நுார், மாநகராட்சி தற்காலிக ஊழியர் சதீஷ் உள்ளிட்ட 7 பேருக்கு ஏற்கனவே உயர்நீதிமன்றக் கிளை நிபந்தனை ஜாமின் அனுமதித்தது.

கைதான ஓய்வு பெற்ற மாநகராட்சி உதவி பொறியாளர் ரங்கராஜன், கம்ப்யூட்டர் புரோகிராம் உதவியாளர்கள் ரவி, கருணாகரன், உதவி வருவாய் அலுவலர் செந்தில்குமரன் மற்றும் கண்ணன் அதே நீதிமன்றத்தில் ஜாமின் மனு செய்தனர்.

நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்தார். மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன்லால், வழக்கறிஞர்கள் பழனிசாமி, முத்துசரவணன் ஆஜராகினர்.

ரங்கராஜன் தரப்பில்,'சம்பவத்தின்போது லோக்சபா தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தேன்.

போலீஸ் விசாரணை அதிகாரிகளில் ஒருவர் அவரது வீட்டிற்கு வரி குறைப்பு செய்துள்ளார். தவறான உள்நோக்கில் என் பெயர் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஜாமின் அனுமதிக்க வேண்டும்,' என வலியுறுத்தப்பட்டது.

மனுதாரர்களுக்கு ஜாமின் அனுமதிக்க அரசு தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ரவி, கருணாகரனுக்கு ஜாமின் அனுமதிக்கப்படுகிறது.

இருவரும் மாநகராட்சி அலுவலகத்திற்குள் நுழையக்கூடாது.

மற்றவர்களின் மனுக்கள் மீதான விசாரணை செப்.11 க்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றார்.






      Dinamalar
      Follow us