நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மடீட்சியாவில் சிட்பி வங்கியின் திட்டங்கள், நிதித் தயாரிப்புகள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
மடீட்சியா தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். சிட்பி வங்கி துணை பொது மேலாளர் பைடா ராமகிருஷ்ணன் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் உள்ள திட்டங்கள் பற்றி பேசினார்.
அரசு வழங்கும் தொழில் முனைவோருக்கு மானிய திட்டங்களின் சலுகைகளையும் விளக்கி னார். மடீட்சியா முன்னாள் தலைவர் சம்பத், வங்கி துணை மேலாளர் விஜய லட்சுமி, திருப்பதிராஜா,குருசாமி பங் கேற்றனர். இணை செயலாளர் பொன்குமார் நன்றி கூறினார்.

