ADDED : ஆக 19, 2026 07:11 PM
மதுரை: கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் (கே.வி.ஐ.சி.,) சார்பில் மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் மாநில அளவிலான தேனீ வளர்ப்போர் கூட்டம் நடந்தது. திட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் வரவேற்றார். டீன் பொறுப்பு ராகவன், மதுரை சமுதாய அறிவியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய டீன் காஞ்சனா, தோட்டக்கலை உதவி இயக்குநர் தாமரைச்செல்வி முன்னிலை வகித்தனர். கே.வி.ஐ.சி., உதவி இயக்குனர் அன்புச்செழியன் துவக்கி வைத்தார். தேன் துறை அலுவலர் கலிபூர் ரகுமான் கே.வி.ஐ.சி., திட்டங்களை விளக்கினார்.
மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், விருதுநகர், கன்னியாகுமரி, திருப்பூர், சென்னையைச் சேர்ந்த 120 பேர் தேனீ வளர்ப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். தேன் சார்ந்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. தேனீ வளர்ப்பாளர்களுக்கு தேன் பிரித்தெடுக்கும் கருவி, தேனீ வளர்ப்பு கையேடு வழங்கப்பட்டது.தொழில்நுட்ப வல்லுநர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
