ADDED : பிப் 19, 2024 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம், : விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் தொகுதி மேம்பாட்டு நிதிமூலம் திருப்பரங்குன்றம் ஆர்ச் அருகில் ரூ.8 லட்சத்தில் உயர்மின் கோபுர மின்விளக்கு. ஹார்விபட்டி பூங்காவில் ரூ. 10 லட்சத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள், போர்வெல், குடிநீர் தொட்டி அமைக்கும் பணி நடக்க உள்ளது.
திருநகர் அமைதிச் சோலை நகர் சேமட்டான் கண்மாய் கரையில் ரூ.20 லட்சத்தில் சாலை வசதி, தனக்கன்குளத்தில் ரூ.20 லட்சத்தில் சமுதாய கூடம் அமைக்கும் பணிக்காக நேற்று பூமி பூஜை நடந்தது. மாணிக்கம் தாகூர் எம்.பி., துவக்கி வைத்தார். காங். நிர்வாகிகள் பாண்டியன், பழனிகுமார், சுப்பிரமணியன், தனக்கன்குளம் ஊராட்சி தலைவர் ஆனந்தி கலந்து கொண்டனர்.

