sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நில அபகரிப்பு வழக்கு பா.ஜ.,நிர்வாகி கைது

/

நில அபகரிப்பு வழக்கு பா.ஜ.,நிர்வாகி கைது

நில அபகரிப்பு வழக்கு பா.ஜ.,நிர்வாகி கைது

நில அபகரிப்பு வழக்கு பா.ஜ.,நிர்வாகி கைது


ADDED : அக் 12, 2025 05:14 AM

Google News

ADDED : அக் 12, 2025 05:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரையில் நில அபகரிப்பு வழக்கில் பா.ஜ.,நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

மதுரை ஆத்திகுளம் சந்தோஷ் ராஜ்குமார். இவர் குடும்பத்தினருடன் லண்டனில் வசித்து வந்தார். மனைவி ரத்தினமாலா. இவர்களுக்கு சொந்தமான 1 ஏக்கர் 30 சென்ட் நிலம் நிலையூர் பெத்தேல் நகரில் உள்ளது. அருகே பா.ஜ., நிர்வாகி குமரேசன் 46, பழைய இரும்பு கடை நடத்துகிறார்.

சந்தோஷ் ராஜ்குமார் இறந்துவிட்டார். நிலத்தை பார்வையிட லண்டனிலிருந்து ரத்தினமாலா குடும்பத்தினருடன் மதுரை வந்தார். போலி ஆவணங்கள் மூலம் குமரேசன் ஆக்கிரமிப்பு செய்ததாக போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. உறவினரான தனக்கன்குளம் சகாயராஜிற்கு பவர் எழுதி கொடுத்தார். நிலத்தை பார்வையிட்டபோது குமரேசன் போலி ஆவணங்கள் மூலம் அவரை மிரட்டினார்.

நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நிலத்தை சகாயராஜ் வசம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒப்படைக்காததால் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சகாயராஜ் புகார் அளித்தார். நிலமோசடி, போலி ஆவணங்கள் தயாரித்து ஆக்கிரமிப்பு செய்ததாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து குமரேசனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us