sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மாவட்டம் தோறும் ஓய்வூதியர் இல்லம் பா.ஜ., வலியுறுத்தல்

/

மாவட்டம் தோறும் ஓய்வூதியர் இல்லம் பா.ஜ., வலியுறுத்தல்

மாவட்டம் தோறும் ஓய்வூதியர் இல்லம் பா.ஜ., வலியுறுத்தல்

மாவட்டம் தோறும் ஓய்வூதியர் இல்லம் பா.ஜ., வலியுறுத்தல்


ADDED : நவ 03, 2025 04:31 AM

Google News

ADDED : நவ 03, 2025 04:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: 'மாவட்டந்தோறும் ஓய்வூதியர்களுக்கு பாதுகாப்பு இல்லங்களை துவக்க வேண்டும்' என பா.ஜ.,வின் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பிரிவினர் தீர்மானம் நிறைவேற்றினர்.

மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் பிரிவு மாவட்ட ஆலோசனை கூட்டம் தலைவர் பரமசிவம் தலைமையில் நடந்தது. பொதுச் செயலாளர் கோபால், திருப்பரங்குன்றம் நகர் மண்டல் தலைவர் வேல்முருகன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர்.

மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார். மாவட்ட நிர்வாகிகள் வடிவேல் சரவணன், ராஜமோகன், அக்கினிராஜ் கதிரேசன் உட்பட பலர் வழிமொழிந்து பேசினர். மத்திய அரசு எட்டாவது ஊதியக்குழு நியமனம் செய்துள்ளதற்கு நன்றி தெரிவிப்பது, தமிழக அரசு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டும்.

மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ்வசதி அளிக்க வேண்டும். மாவட்டந்தோரும் ஓய்வூதியர் பாதுகாப்பு இல்லங்கள் உருவாக்க வேண்டும். தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில் போராட்டங்களை நடத்துவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us