/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முதல்வர் கோப்பை: மன்னர் கல்லுாரிக்கு பதக்கம்
/
முதல்வர் கோப்பை: மன்னர் கல்லுாரிக்கு பதக்கம்
ADDED : செப் 15, 2025 03:51 AM

திருப்பரங்குன்றம் : மதுரையில் நடந்த முதல்வர் கோப்பை போட்டிகளில் உயரம் தாண்டுதல், வாள் வீச்சு, சிலம்பம் போட்டிகளில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி வீரர்கள் பதக்கங்களை வென்றனர்.
உயரம் தாண்டுதலில் தனுஷ்ஸ்ரீ தங்கப் பதக்கம் வென்றார். சிலம்பம் போட்டிகளில் 65 கிலோ எடை பிரிவில் ஹர்ஷினி தங்கப்பதக்கம் வென்றார்.
வாள்வீச்சு போட்டிகளில் பாயில் பிரிவில் குணசீலன் வெண்கலப் பதக்கம், தனிப்பிரிவில் யமுனாதேவி வெள்ளிப் பதக்கம், பிரியதர்ஷினி ஆர்த்தி, அமிர்தவர்ஷினி, வெண்கலப் பதக்கங்கள், சேபர் பிரிவில் வைஷ்ணவி வெண்கலப் பதக்கம் வென்றனர். பதக்கம் வென்ற வீரர்களை கல்லுாரித் தலைவர் விஜயராகவன், கவுரவ தலைவர் ராஜகோபால், செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் ஆழ்வார்சாமி, உப தலைவர் ஜெயராம் , உதவி செயலாளர் சுரேந்திரன், முதல்வர் ராமசுப்பையா, சுயநிதி பிரிவை இயக்குனர் பிரபு, உடல் கல்வி இயக்குனர்கள் கோவிந்தம்மாள், ராகவன் பாராட்டினர்.