நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுாரில் 'உங்களை தேடி உங்கள் ஊரில்' என்ற நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக நேற்று கலெக்டர் சங்கீதா போலீஸ் ஸ்டேஷனில் ஆய்வு செய்தார்.
குற்றப் பதிவேடுகள், வழக்குகள் குறித்து போலீசாரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து தும்பைட்டி பால்பண்ணை, கூட்டுறவு சங்கத்தை ஆய்வு செய்தவர், மாடுகளுக்கு ஊட்டச்சத்து மருந்து கொடுத்தார். மேலுார் நகராட்சி அலுவலகம், புதிய பஸ் ஸ்டாண்ட், மண்கட்டி தெப்பக்குளம், பூங்காவை ஆய்வு செய்தார். ஆர்.டி.ஓ, ஜெயந்தி, தாசில்தார் முத்துபாண்டியன், நகராட்சி கமிஷனர் ஆறுமுகம், தலைவர் முகமதுயாசின் உடனிருந்தனர்.