sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மரக்கிளை விழுந்து பலியானதற்கு இழப்பீடு; : உயர்நீதிமன்றம் உத்தரவு உயர்நீதிமன்றம் உத்தரவு

/

மரக்கிளை விழுந்து பலியானதற்கு இழப்பீடு; : உயர்நீதிமன்றம் உத்தரவு உயர்நீதிமன்றம் உத்தரவு

மரக்கிளை விழுந்து பலியானதற்கு இழப்பீடு; : உயர்நீதிமன்றம் உத்தரவு உயர்நீதிமன்றம் உத்தரவு

மரக்கிளை விழுந்து பலியானதற்கு இழப்பீடு; : உயர்நீதிமன்றம் உத்தரவு உயர்நீதிமன்றம் உத்தரவு

1


ADDED : நவ 24, 2024 07:19 AM

Google News

ADDED : நவ 24, 2024 07:19 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : கன்னியாகுமரி-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் மரக்கிளை முறிந்து விழுந்து டிரைவர் பலியானதற்கு மத்திய அரசு ரூ.16 லட்சத்து 78 ஆயிரம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

அகஸ்தீஸ்வரம் அருகே கன்னிவிநாயகபுரம் நீலாவதி, செல்வமணி தாக்கல் செய்த மனு:

எங்கள் மகன் வாசன் 27. ஒரு தனியார் நிறுவனத்தில் தினக்கூலி அடிப்படையில் வேன் டிரைவராக வேலை செய்தார்.

கன்னியாகுமரி- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் பொற்றையடியிலிருந்து கன்னியாகுமரி நோக்கி கற்கள் ஏற்றிய வாகனத்தை 2011 ல் ஓட்டிச் சென்றார்.

சாலை அருகே இருந்த மரத்தின் பெரிய கிளை முறிந்து வாகன கூரையில் விழுந்தது. மகனின் தலையில் காயம் ஏற்பட்டது. நாஞ்சில்நாடு புத்தனாறு கால்வாயில் வாகனம் கவிழ்ந்தது.

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மகன் இறந்தார். சாலையின் இருபுறமும் நடப்பட்டுள்ள மரங்களை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்.எச்.ஏ.ஐ.,) பராமரிக்கவில்லை.

இதனால் மரக்கிளை முறிந்து விழுந்ததில் மகன் இறந்தார். எங்களுக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு கோரி அத்துறைகளுக்கு மனு அனுப்பினோம். இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.

நீதிபதி ஜி.கே.இளந்திரையன்:

வேறு காரணங்களால் விபத்து ஏற்படவில்லை. மரங்களை முறையாக பராமரிக்காமல், பழைய மற்றும் பழுதடைந்த மரங்களை அகற்றத் தவறியதால்தான் விபத்து ஏற்பட்டது. மத்திய சாலை போக்குவரத்துத்துறை, என்.எச்.ஏ.ஐ.,கவனக்குறைவாக செயல்பட்டுள்ளன.

அத்துறைகள் மனுதாரர்களுக்கு ரூ.16 லட்சத்து 78 ஆயிரம் இழப்பீடு தொகையை 6 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us