நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மதுரையில் எஸ்.டி.பி.ஐ., சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டனம் மற்றும் இரங்கல் கூட்டம் நடந்தது.
தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர்தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது, வர்த்தக அணி நிர்வாகி யூசுப்கான், மாநில செயற்குழு உறுப்பினர் முஜிப்பூர் ரஹ்மான், வடக்கு மாவட்ட தலைவர் பிலால்தீன் உள்ளிட்டோர் பேசினர். பொருளாளர் செந்தில் நன்றி கூறினார்.

